மதிப்பற்றவனென்று எந்த மனிதனையும் கடந்துசெல்லாமல், ஒவ்வொரு ஆத்துமாவிற்கும் குணமளிக்கும் தீர்வைக் கொடுக்க அவர் நாடினார். எந்தக் கூட்டத்தில் இருந்தாலும் அந்தச் சூழ்நிலைக்கும் நேரத்திற்கும் ப�ொருத்தமான ஒரு பாடத்தை அவர் கொடுத்தார். மனிதர் சகமனிதரை புறக்கணித்து அவமானப்படுத்திய செயல் ஒவ்வொன்றும், அவர்களுக்கு தமது தெய்வீக—மனுஷீக இரக்கம் எவ்வளவு அவசியம் என்பதை அவருக்கு அதிகமாக உணர்த்தியது. கரடுமுரடாகவும், எதிர்கால நம்பிக்கையின்றியும் இருப்பவர்கள்முன், அவர்கள் குற்றமற்ற தீங்கில்லாதவர்களாக மாறமுடியும் என்கிற நிச்சயத்தை வைத்து, அவர்களை நம்பிக்கையினால் ஏவ அவர் வகைதேடினார். அப்படிப்பட்ட குணத்தை அடைவது அவர்களை தேவனுடைய பிள்ளைகளென்று காண்பிக்கும். {MH 25.5}
சுகப்படுத்தும் ஊழியம்
SKU: MH TAM
₹200.00Price

